பட்டப்பகலில் மனைவியை குத்தி கொன்ற கணவன் - கோவை மருத்துவமனையில் நடந்த பயங்கரம்!!

 
tn

கோவை சிவானந்தா காலனி சேர்ந்தவர் நான்சி.  இவரது கணவர் வினோத். இவர்களுக்கு 8  வயதில் பெண் குழந்தை உள்ளது.  நான்சி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார்.  குடும்ப தகராறு காரணமாக கணவர் வினோத்தை பிரிந்து தனது மகளுடன் நான்சி தனியாக வசித்து வந்துள்ளார்.  இந்த சூழலில் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்த வினோத் மனைவி நான்சியை  சந்தித்து பேசியதாக தெரிகிறது . அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  

murder

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவர் வினோத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நான்சியை மருத்துவமனையிலேயே வைத்து சரமாரியாக குத்தியுள்ளார்.இதில் நான்சி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக விழுந்து துடிதுடித்து இறந்துள்ளார் . இதையடுத்து அங்கிருந்தவர்கள் வினோத்தை மடக்கி பிடித்துள்ளனர்.  இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்சியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  

murder

குத்தும்போது காயமடைந்த வினோத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  சிகிச்சைக்கு பிறகு கொலைக்கான  காரணம் குறித்து வினோத்திடம் விசாரணை நடத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டப் பகலில் மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவனே சரமாரியாக குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.