ICSE 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் இன்று மாலை வெளியீடு

 
icse

ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படவுள்ளதாக ஐசிஎஸ்இ கவுன்சிலின் செயலாளரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெரி அரத்தூன் தெரிவித்துள்ளார். முதல் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வுகளில் எடுத்த மதிப்பெண்களுக்கு சம அளவில் முக்கியத்துவம் அளித்து இறுதி மதிப்பெண் கணக்கிடப்படும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஐசிஎஸ்இ கவுன்சிலின் செயலாளரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெரி அரத்தூன் கூறியதாவது: 
ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று மாலை 5.00 மணிக்கு ஐசிஎஸ்இ கவுன்சிலின் கேரியா்ஸ் வலைதளத்தில் வெளியிடப்படும். எஸ்எம்எஸ் மூலமாகவும் மாணவர்கள் தோ்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பாடத்திலும் மாணவா்கள் முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வுகள், செயல்திட்டம், உள்ளக மதிப்பீடு ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களைச் சோ்த்து இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
 முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வை எழுதாத மாணவா்களுக்கு தோ்வுக்கு வரவில்லை (ஆப்செண்ட்) என்று குறிப்பிடப்படும். மேலும் முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவத் தோ்வை எழுதாத மாணவா்களுக்கு தோ்வு முடிவு வெளியிடப்பட மாட்டாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.