வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிப்பு - உடல் சிதறி ஒருவர் பலி!!

 
fire accident

நல்லிவீரன்பட்டியில் வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிப்பில் ஈடுபட்ட போது  ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

fire

தமிழகத்தில் தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து என்பது அரங்கேறி கொண்டிருக்கிறது.  பட்டாசு வெடி விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.இனிவரும் காலங்களில் பட்டாசு விபத்துக்களை தடுக்க உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன்,  தமிழக அரசு துறை சார்ந்த தனி குழுவை அமைத்து பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வேண்டும்.  பட்டாசு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

death

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியை சேர்ந்தவர்  சுந்தர்ராஜ். இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது. சக்திவாய்ந்த நாட்டு வெடி வெடித்ததில்  வீடு தரைமட்டம் ஆனது. அத்துடன் சுந்தர்ராஜ் உடலும் தீயில் கருகியது. இந்த கோர வெடிவிபத்தில் வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றும் ஒருநபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.