#BREAKING "ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு!!

 
rb

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்த வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

tn

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.  அத்துடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே  தொடர வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.  இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இம்மனுக்களை நீதிபதிகள் சுந்தர் மோகன் மற்றும் துரைசாமி அமர்வு விசாரித்து வந்தது.  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர்.  இதையடுத்து இரு தரப்பு வாதத்தையும் கேட்ட இரு நீதிபதிகள் தரப்பு கடந்த 25ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

ops eps

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்த எடப்பாடி பழனிசாமி வழக்கில் நீதிபதிகள்  துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.