நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,062 பேருக்கு கொரோனா

 
corona

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைவிட சற்று உயர்ந்துள்ளது.  நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்  9,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. குறிப்பாக கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில். நேற்று முன் தினம் அதற்கு கீழே குறைந்தது. நேற்று முன் தினம் 14,917 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று, நீண்ட நாட்களுக்கு பிறகு 10,000க்கு கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 9,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 86 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,05,058 ஆக குறைந்துள்ளது.

17 aug

 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 36பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 15,220 பேர் குணமடைந்த நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 54 ஆயிரத்து 64 ஆக அதிகரித்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 2.49%சதவீதமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாட்டில்  25.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 208 கோடியாக அதிகரித்துள்ளது.