நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்குத் தடை!!

 
tn

நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

vijay

நடிகர் விஜய் புலி படத்திற்காக 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும்,  அதை அதை மறைத்து அதை மறைத்த காரணத்திற்காக ரூ.1.5 கோடி அபராதம் விதித்து வருமானவரித்துறை உத்தரவிட்டது.  2015 ஆம் ஆண்டு விஜய்யின் வீடு, புலி பட தயாரிப்பாளர்கள் பி.டி. செல்வகுமார் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சுமார் 25 கோடி ரூபாய் வரியைப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் அடிப்படையில் விஜய்க்கு வருமானவரித்துறை அபராதம் விதித்தது. வருமான வரித்துறையின் உத்தரவுக்கு எதிராக நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்ந்தார்.  

Puli

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. புலி திரைப்படத்துக்கு பெற்ற ரூ. 15 கோடி சம்பளத்தை மறைத்ததாகக் கூறி அபராதம் விதித்திருந்ததை தொடர்ந்து விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது வருமானவரித்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.  அத்துடன் செப்டம்பர் 16ஆம் தேதிக்குள் இது குறித்து பதிலளிக்க வருமானவரித்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.