இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

 
corona

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று முன் தினம் 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் நேற்று  201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில்ல் கடந்த 24 மணி நேரத்தில் 227- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைவிட 26 எண்ணிக்கை அதிகமாகும். 

இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,424- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 77 ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 693- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 220.05 கோடியாக உயர்ந்துள்ளது.