விருதுநகர் வன்கொடுமை - 4 சிறார்களிடம் விசாரணை!!

 
tn

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 சிறார்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

tn

விருதுநகர் அருகே இளம்பெண் ஒருவரை கடந்த சில மாதங்களாக ஹரிஹரன்,  ஜூனைத்   அகமது ,மாடசாமி பிரவீன் மற்றும் 4 சிறுவர்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். இதுதொடர்பாக இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 4 பேர்  மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்று நிலையில் ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரை ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. 

tn

இந்நிலையில் விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில்  மதுரை கூர்நோக்கு இல்லத்தில் வைத்து 4 சிறார்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை. நடத்தி வருகின்றனர்.  ஹரிஹரன், ஜூனைத்  உள்ளிட்ட 4 இளைஞர்களை ஏற்கனவே சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த சூழலில் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான குழு பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.