"தமிழ்ச்சுவடியியல் மாணவர்கள் சேர்க்கை" - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!!

 
tn

கல்வி உதவித்தொகையுடன் தமிழ்ச்சுவடியியல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ச்சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு தமிழ்ச்சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய படிப்புக்கான எழுத்துத் தேர்வு வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறுகிறது . இப்படிப்புகளில் சேர விரும்புவோர் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின்  www.ulakththamizh.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளலாம்.

tn

ஆன்லைன்  வழியாக விண்ணப்பங்களை பெற இயலாதவர்கள் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். தமிழ்ச்சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்புகளுக்கான சேர்க்கை கட்டணம் ரூபாய் 3100 , கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் , வயது வரம்பு என்பது ஏதும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

rn

அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் Director, International Institute of Tamil Studies என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.  விண்ணப்பத்துடன் ரூபாய் 3100 க்கான  டிடி,  பள்ளி கல்வி சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ அளிக்கலாம். அத்துடன் விண்ணப்பத்தில் உங்கள் வாட்ஸ்அப் எண்ணும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

tn

13-ஆம் தேதி தேர்வு நடைபெற்று முடியும் நிலையில் ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளது .அத்துடன் இந்த இது குறித்து கூடுதல் விபரங்களை பெற  044-22542992  என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று  உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இப்படிப்பினை  படிக்கும் மாணவர்களுக்கு கல்விஉதவித்தொகையும் அளிக்கப்படும் என்பது கூடுதல் தகவல். 

 முகவரி :- இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113