பெரியாரே பெரிய சாதி வெறியரா? பன்னாடைகளை தூக்குல போடு! வலுக்கும் சர்ச்சை

 
பெ

ஈரோட்டில்  வெடித்த சர்ச்சை நாலாபுறமும் வலுத்து வருகிறது.   அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசியதால்,  ’பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்று நினைப்பு’’என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சித்திருந்தார். இளங்கோவனின் இந்த பேச்சு பலத்த சர்ச்சையை எழுப்பி இருக்கிறது.

எ

மூடர் கூடம்,  கொளஞ்சி, அலாவுதீன் அற்புத கேமரா, அக்னி சிறகுகள் போன்ற படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் நவீன் முகம்மது அலி,  ‘’பெரியாரையும் அம்பேத்கரையும் உள்வாங்காததால்தான்  ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரசில் சேர்ந்தார். பிறப்பின் அடிப்படையில் அறிவு வருவதில்லை என்பதற்கு இவரே உதாரணம். இளையராஜா கருத்தை விமர்சிக்காமல் அவரையும் அவர் சாதியையும் விமர்சிப்பது பெரியாரிய மேடைக்கு உகந்ததல்ல.  அந்த மேடையிலிருந்த ஆசிரியர் கி.வீரமணி, இளங்கோவனின் அபத்தமானக்கருத்தை ஆமோதித்து,கைதட்டுகிறார் என்பதையும், தங்களது மேடையில் இதுபோன்ற கருத்துகள் வைக்கப்படுவதை மறுத்து கி.வீரமணியோ, ஏனையோரோ பேசவில்லை என்பதையும் தாங்கள் விமர்சிக்காது கடந்துபோவது தற்செயலானதுதானா?’’ என்று கண்டம் தெரிவித்திருக்கிறார்.


நவீணின் இந்த டுவிட்டர் பதிவுக்க்கு கீழே பலரும் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.  80 வயதுக்கு மேல் ஆகிறது.  இன்னும் இளையராஜாவாம் என்று கிண்டல் செய்திருந்தார்  ஈவிகேஎஸ் இளங்கோவன்.  அதற்கு ராஜாராம் என்பவர்,  ‘’த.நா.ல் மதுவிலக்குப் போராட்டம் நடந்த போது ஜெ. பற்றி தவறான வார்த்தை பேசி போராட்டம் ஓய்ந்து போக அதிமுகவிற்கு உதவியவர். தேனியில் இவரது தோல்வி சந்தேகத்திற்குரியது. அத்துமீறி பேசுவதில் வல்லவர். வயதானால் முதியராஜா என பெயர் மாற்ற வேண்டுமா. இளங்கோவன் பெயரை கிழங்கோவனென பெயர் மாற்றுவாரா?’’என்று கேட்டிருக்கிறார்.

’’இதுக்கு தான்டா தேவேந்திர குல வேளாளர் சமூகம் பட்டியல் வெளியேற்றம் கேட்கிறோம்.பட்டியல் சமூக மக்கள் எவ்வளவு உயர்ந்தாலும் பொது பார்வையில் அவர்கள் தாழ்த்தப்பட்ட நசுக்கப்பட்ட இன்னும் சில அடையாளங்கள் தேவையில்லாமல் புகுத்த படுகிறது.’’என்கிறார் சாமிகிருஷ்ணன்.

’’ஒருவர் தவறு செய்து விட்டால் அவருக்கு அதற்குரிய  தண்டனை தரலாம் .  பிறகு திருந்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது, ஈவிகேஎஸ் போல பன்னாடைகளை உடனே தூக்கில் போடுங்கள்.  அப்படி என்று சொல்லும் நாதாரிகள் வாயால் அழிந்து போகும் வல்லமை கொண்டவன் திருந்தாத பெரியாரின் பேரன்’’ என்கிறார் மனி முனுசாமி.

எ

’’இருவருமே தெலுங்கர்கள். இருவருமே திராவிட விஷம். இது உங்களுக்கு தெரியாதா ? ஈ வே ரா விற்கு தெலுங்கு நாயக்க சாதிவெறி இருந்தது. அதுவும் உங்களுக்கு தெரியாதா?’’ என்று கேட்கிறார் பழனி.

’’பெரியாரே ஒரு பெரிய சாதி வெறியர் தான். தமிழர்களை ஏமாற்ற இந்த நாடகம் ரொம்ப நாள் நிலைக்காது நவீன்!’’என்கிறார் கரிகாலன். ’’சோத்துக்கு பிச்சை எடுக்கிறவங்களா இருந்தா நீங்க சாதி பாக்க மாட்டிங்க பனம் இருக்கிர திமிரு டா உங்களுக்கு அம்பேத்கர் என்ற ஒரு ஆயுதம் இல்லை என்றால் அவ்ளோதான் நான் ஒரு சவால் விடுரன் உங்க சாதி காரன் உற்பத்தி பன்னுர பொருள வச்சி வாழுங்கடா பாக்கலாம்’’என்கிறார் வெங்கட்.

ஈரோட்டில் இளங்கோவனால் வெடித்த சர்ச்சை நாலாபுறமும் வலுத்து வருகிறது.