தமிழ்நாடு பெயர் பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - ராமதாஸ் ட்வீட்
மத்திய அரசின் இணையதள பக்கத்தில் தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக "தமிழ்நாயுடு" என தவறாக குறிப்பிட்டதால் சர்ச்சை எழுந்த நிலையில், "தமிழ்நாடு" என திருத்தப்பட்டது.
டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் அலங்கார உறுதிகளில் சிறந்த ஊர்தியை இணைய வழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தமிழ் நாயுடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிட்டிருப்பதை எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்க கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரை தேடி தரும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அரசின் https://t.co/3k744poSFL இணையதளத்தில் தவறாக TamilNaidu என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர், சுட்டிக்காட்டப்பட்ட பிறகு சற்று முன் TamilNadu என்று திருத்தப்பட்டுள்ளது. இந்த பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!@mygovindia @NICMeity pic.twitter.com/ESRSofKxEh
— Dr S RAMADOSS (@drramadoss) January 28, 2023
மத்திய அரசின் https://t.co/3k744poSFL இணையதளத்தில் தவறாக TamilNaidu என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர், சுட்டிக்காட்டப்பட்ட பிறகு சற்று முன் TamilNadu என்று திருத்தப்பட்டுள்ளது. இந்த பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!@mygovindia @NICMeity pic.twitter.com/ESRSofKxEh
— Dr S RAMADOSS (@drramadoss) January 28, 2023
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசின் http://mygov.in இணையதளத்தில் தவறாக TamilNaidu என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழ்நாட்டின் பெயர், சுட்டிக்காட்டப்பட்ட பிறகு சற்று முன் TamilNadu என்று திருத்தப்பட்டுள்ளது. இந்த பிழைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.