தமிழகத்தில் இன்றும், நாளையும் 9 மாவட்டங்களில் மழை பெய்யும்!!

 
rain

தமிழகத்தில் இன்றும் நாளையும் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

rain

நாளை மறுநாள் முதல் 19ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும், சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் ,காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸில் ஒட்டியிருக்கும்.

rain

கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.