JEE மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

 
JEE

ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர JEE எனப்படும்  ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில்   தேர்ச்சி பெற வேண்டும். இவை JEE முதல்நிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெற்று வந்த நிலையில், 2022-23-ம் கல்வியாண்டில் இருந்து 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இந்தாண்டுக்கான முதல்கட்ட தேர்வு ஏப்ரல் மாதத்திலும்,  2-ம் கட்ட தேர்வு மே மாதத்திலும்  நடைபெறும் என தேசிய தேர்வு முகமை முன்னர் அறிவித்திருந்த நிலையில், முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து ஏப்ரல் மாதத்திற்கான தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்தைவைக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்துக்கான தேர்வு ஜூன் 23,24,25,26,27, 28, 29 ஆகிய 7 நாட்களில் நாடு முழுவதும்  501 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது ஏப்ரல் மாத தேர்வுக்கான மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.விண்ணப்ப பதிவு எண், பிறந்த தேதி, இரகசிய எண் ஆகிய விவரங்களை அளித்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.