பாரத் ஜோடோ யாத்திரையில் பெரியாருக்கு வணக்கம் - கமல்ஹாசன் ட்வீட்..

 
Rahul and kamal


பெரியாரின் நினைவுநாளில், அவருக்கு பாரத் ஜோடோ யாத்திரையிலிருந்து வணக்கம் செய்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

பாரத் ஜோடோ யாத்திரையில் பெரியாருக்கு வணக்கம் -  கமல்ஹாசன் ட்வீட்.. 

டிசம்பர் 24 பெரியாரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.  இதனையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும்  அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.  அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், பாரத் ஜோடோ யாத்திரையில் பெரியாருக்கு வணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள அவர், “ பாகுபாடு இல்லை உயர்வு தாழ்வு இல்லை பிறப்பில் பெருமை இல்லை என இல்லைகளைப் பிரச்சாரம் செய்ததோடு,  சமச்சமூகத்தில் பொன்னுலகம் உண்டு என்ற நம்பிக்கையையும் விதைத்த பெரியாரின் நினைவுநாளில், பாரத் ஜோடோ யாத்திரையில் இருந்து அவருக்கு வணக்கம் செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.  


ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமைக்கான நடைபயணத்தில்  கமல்ஹாசன் பங்கேற்பார் என முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது.   அதன்படி இன்று  டெல்லியை சென்றடைந்துள்ள  ராகுலின் நடைபயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.  இதற்காக டெல்லி சென்றுள்ள அவர்,  யாத்திரை நடைபெறும் இடத்திற்கு புறப்பட்டுள்ளார்.