"கர்நாடக அரசின் துணிச்சலான நடவடிக்கை" - தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை!!

 
PMK

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை  மக்கள்தொகைக்கு இணையாக 22% ஆக உயர்த்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

pmk

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர், "கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 15%லிருந்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3%லிருந்து 7% ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த சமூகநீதி காக்கும் நடவடிக்கையாகும்! தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22% ஆக உயர்த்த வேண்டும் என்று 1980-ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். 


இந்த கோரிக்கையையும் வலியுறுத்தி தான் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது! பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பதால், மொத்த இட ஒதுக்கீட்டையும் 56% ஆக உயர்த்த கர்நாடகம் தீர்மானித்திருப்பது துணிச்சலான நடவடிக்கை ஆகும்.  தமிழ்நாட்டிலும்  அத்தகைய துணிச்சலான நடவடிக்கையை  எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.