"கால் வலியால் அவதி" - நெல்லையப்பர் கோயில் யானைக்கு தோல் செருப்பு!!

 
tn

நெல்லையப்பர் கோவில் யானைக்கு ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள தோல் செருப்பு வழங்கப்பட்டுள்ளது.

tn

நெல்லையில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி என்னும் பெண் யானை ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.  52 வயதாகும் இந்த யானை ஆனி  திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது சுவாமியின் முன்பே கம்பீரமாக செல்லும் . அண்மைக்காலமாக காந்திமதியானைக்கு மூட்டு வலி மற்றும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டது.  இதனால் யானை கால் வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தது.

tn

இந்த சூழலில் பக்தர்கள் சிலர் காந்திமதி யானைக்கு அணிவிக்க நான்கு கால்களுக்கும் நான்கு காலனியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.   கால் வலியால் யானை அவதியுறாமல் இருக்க பக்தர்கள் ரூபாய் 12000 மதிப்புள்ள நான்கு தோல் செருப்புகளை வழங்கி உள்ளனர். இச்செருப்புகள் யானை பாகனிடம் வழங்கப்பட்டுள்ளது.