#BREAKING சட்டப்பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு - மீண்டும் நாளை கூடுகிறது!!

 
govt

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

appavu

கடந்த 2022 -23 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம், கோவை தங்கம், ஹக்கீம், அமீது இப்ராகிம், வீரப்பன், ராஜா, பச்சையப்பன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், திருவேங்கடம் உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அஞ்சலை பொன்னுசாமி, சிபிஎம் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட  தலைவர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 

tn govt

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்தபின் அவை நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.