சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும்?

 
appavu

சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

govt

நடப்பாண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டத்துடன் இன்று ஆளுநர் ஆர் என் .ரவி உரையுடன் தொடங்கியது.  சுமார் 50 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் தமிழக அரசின் கொள்கைகளை விளக்கினார்.  இருப்பினும் அவர் திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் ,  மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற வாசகத்தையும் தவிர்த்து விட்டார்.

tn

ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலும் ஆளுநர் உரைக்குப் பிறகு கூட்டம் முடிவடைந்து விடும்.  ஆனால் சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பேசினார் . அவர் ஆளுநர் தானாக கூறிய சொந்த கருத்துக்களை அவை குறிப்பிலிருந்து நிற்க வேண்டும் என்று கூறியதுடன்,  ஆளுநர் திராவிட மாடல் ஆட்சி மற்றும் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடாததற்கு தனது கண்டனங்களை பதிவு செய்தார். இதையடுத்து ஆளுநர் ரவி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பே அவையில் இருந்து வெளியேறினார்.

tn

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 13ஆம் தேதி வரை நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருமகன் ஈவேரா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றி நாளை முழுவதும் அவை ஒத்திவைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.