இந்த மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அதிரடி உத்தரவு..

 
உள்ளூர் விடுமுறை

ஆனித் தேரோட்டத்தையொட்டி  நெல்லை மாவட்டத்திற்கு நாளை ( ஜூலை 11)  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து நெல்லை மாவட்ட  ஆட்சியர்  விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித் தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் பவித்ரா உற்சவம்!

அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால், பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

பங்குனி உத்திரம் - உள்ளூர் விடுமுறை

மேலும், இந்த மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 23-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.