சென்னை ஆயிரம் விளக்கில் எம்ஜிஆர் சிலை சேதம் - ஓபிஎஸ் கண்டனம்!!
சென்னை ஆயிரம் விளக்கில் எம்ஜிஆர் சிலை சேதமானதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு ஜி.என். செட்டி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில் சிலையை ஓபிஎஸ் நேரில் பார்வையிட்டார்.
சென்னை, தேனாம்பேட்டை, G.N Chetty சாலையிலுள்ள அஇஅதிமுக நிறுவனர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. pic.twitter.com/nWnIPDooMy
— O Panneerselvam (@OfficeOfOPS) September 27, 2022
சென்னை, தேனாம்பேட்டை, G.N Chetty சாலையிலுள்ள அஇஅதிமுக நிறுவனர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. pic.twitter.com/nWnIPDooMy
— O Panneerselvam (@OfficeOfOPS) September 27, 2022
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் , சென்னை, தேனாம்பேட்டை, G.N Chetty சாலையிலுள்ள அஇஅதிமுக நிறுவனர் இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இந்தச் செயலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த சிலையை சரி செய்யவும், இனி வருங்காலங்களில் தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன். " என்று குறிப்பிட்டுள்ளார்.