ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்கவேண்டும் : கமல் கோரிக்கை!!

 
tn

ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைத்துள்ளது.

tn

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த 21.02.2022 அன்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்  தலைமை செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்து, ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அத்துடன் 12 ஆண்டுகளுக்கு முன் சட்டமியற்றப்பட்டு இன்னமும் நடைமுறைக்கு வராத ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்தோம்.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி மலர ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்றார்.

tn

அதனைத் தொடர்ந்து (28.02.2022)  இன்று,  தமிழகமெங்கும் உள்ள மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலாளர்கள், அந்தத்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினர்.சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களிடமும் இதற்கான மனுக்கள் வழங்கப்பட்டன.