மாண்டஸ் புயலால் இத்தனை கோடிக்கு சேதமா?? - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை..

 
சென்னை மெட்ரோ

மாண்டஸ் புயலால் மெட்ரோ  ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும்  கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தாலும், இன்றும் பல இடங்களில் பரவலாக மழை தொடர்கிறது.  புயல் கரையைக் கடக்கும் போது பெய்த மழை மற்றும் சூறைக்காற்றினால்  மக்கள் கடுமையாக  பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வழக்கத்தை விட பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதிலும், சென்னையில் மழை, காற்றினால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.  

மாண்டஸ் புயலால் இத்தனை கோடிக்கு சேதமா??  -  மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை..

அந்தவகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் மற்றும் இதர பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் , இதன் மதிப்பீடு தோராயமாக   3 கோடியே 45 லட்சத்து 448 ரூபாயாக  இருக்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு, புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ, ஈக்காட்டுதாங்கல், சின்னமலை, கிண்டி ஆகிய இடங்களிலும்   மெட்ரோ இரயில் நிலையங்களின் மேற்கூரைகள்   மாண்டஸ் புயல் தாக்கத்தில் சேதமடைந்தது.   இதுதவிர, அண்ணாநகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வழிக்காட்டிப் பலகைகளும், இதர பொருட்களும் சேதமடைந்தன.

மாண்டஸ் புயலால் இத்தனை கோடிக்கு சேதமா??  -  மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை..

கோயம்பேடு பணிமனை, திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இடம் ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தது, குழாய் உடைப்பு போன்ற  சேதங்கள்  ஏற்பட்டுள்ளன.  41 மெட்ரோ இரயில் நிலையங்களில்  4  குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் இந்த சேத மதிப்பீட்டை கணக்கிட்டுள்ளனர். சேதம் அடைந்த மேற்கூரைகள் மற்றும் இதர பொருட்களை சீரமைக்க  நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.