ஒருநாள் லீவ் விடுங்க ப்ளீஸ் - மாவட்ட ஆட்சியருக்கு மாணவர்கள் அன்பு தொல்லை!!

 
tb

மழைக்காரணமாக விடுமுறை அளிக்கக்கோரி புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுக்கு மாணவர்கள் பலர் மெசேஜ் செய்துள்ளனர்.

tn

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக கனமழை அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் விடுமுறை வழங்கி வருகின்றனர்.  அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக புதுக்கோட்டையில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பள்ளி,  கல்லூரிகளுக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.  பத்தாம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுக்கோட்டையில் காலாண்டு விடுமுறை முடிந்து கடந்த 11ம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் மழையின் காரணமாக விடுமுறை அறிவித்தார். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை முதலே மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுக்கு இன்ஸ்டாகிராமில் மாணவர்கள் பலர் மெசேஜ் அனுப்ப தொடங்கியுள்ளனர்.  ஏராளமான மாணவர்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்க வேண்டும் என மெசேஜ் அளித்துள்ளனர்.  இன்னும் சில மாணவர்கள் ஒரு படி மேலே சென்று விடுமுறை அளித்தால் உங்களுக்கு கோவில் கட்டுகிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.