தமிழ் பெண்ணுக்கு மணமகனாகும் "மேக்ஸ்வெல்".. யார் அவர்? - சுவாரஸ்யமான காதல் கதை!

 
மேக்ஸ்வெல்

நேற்று ஐபிஎல் ஏலம் ஒருபுறம் இருந்தாலும் ஆஸ்திரேலிய வீரர் "மணமகன்" மேக்ஸ்வெல்லின் பேச்சு தான் இணையம் முழுக்க. 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஒரே வயிற்றெரிச்சல் பதிவுகள் தான். இருப்பினும் கனத்த இதயத்துடன் மேக்ஸ்வெல்லுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். ஏன் இவர்கள் கதற வேண்டும்? மேக்ஸ்வெல் தமிழ் பின்னணி கொண்ட பெண்ணை மணக்கவிருப்பதே அதற்குக் காரணம். இதுகுறித்த மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை தான் அதிக கவனம் பெற்றது. அப்படியே தமிழ் பாரம்பரியப்படி அச்சடிக்கப்படுவது போன்று பத்திரிகை அச்சிடப்பட்டிருந்தது.

Aussie marries Tamil girl, cricketer Maxwell .. Wedding wedding invitation  goes viral on the internet - time.news - Time News

மேக்ஸ்வெல்லை மணந்துகொள்ளப் போகும் அந்தப் பெண்ணின் பெயர் வினி ராமன். இவருடைய பெற்றோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால் வினி ராமன் பிறப்பதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியாவிற்குச் சென்றுவிட்டனர். அங்கு சென்ற பிறகே வினி ராமன் பிறந்தார். மெல்போர்னில் பிறந்த இவர் மருத்துவம் சார்ந்த படிப்பு படித்துள்ளார். 2013ஆம் ஆண்டு தான் மேக்ஸ்வெல்லுக்கும் வினி ராமனுக்கும் முதல் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் எதேச்சையாக அடுத்தடுத்து இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளார்கள்.

Glenn Maxwell gets engaged in traditional Indian ceremony

அந்தச் சந்திப்புகள் அவர்களை நண்பர்களாக்கியது. இப்படியாக நான்கு ஆண்டுகள் கடந்துசெல்ல 2017ஆம் ஆண்டு நாம் இருவரும் டேட் செய்யலாமா என மேக்ஸ்வெல் கேட்க, வினி ராமனும் ஆமோதித்திருக்கிறார். இந்த டேட்டிங் நன்றாக செல்ல தன்னுடைய காதலை மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். தமிழ் பெண்களுக்கே உரித்தான பாணியில் சில நாட்கள் இழுத்தடித்த வினி ராமன் கடைசியாக மேக்ஸ்வெல்லுக்கு ஓகே சொல்லிவிட்டார். இதன்பிறகு இரு வீட்டாருக்கும் இவர்கள் காதல் விவகாரம் தெரியவர, அவர்கள் சைடிலும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.

இதன் விளைவாக 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி மேக்ஸ்வெல்லும் வினி ராமனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணமும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் திருமணம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் மாதம் 27ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான திருமண பத்திரிகை தான் இப்போது இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது. இது சம்பிரதாயத்திற்கே நடைபெறுகிறது. நிச்சயதார்த்தம் முடிந்தபின் இருவரும் ஒன்றாகவே தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.