"வாழ்க்கையில் முன்னோக்கி நடப்பதற்கான பணிகளை செய்ய வேண்டும்" - அமைச்சர்.மா.சு. பேச்சு!!

 
ttn

பிளாஸ்டிக்கை ஒழிக்க தமிழ்நாடு முதலமைச்சர் இடத்தில மிகப்பெரிய முயற்சி தான் மீண்டும் மஞ்சப்பை திட்டம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

tn

உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைச்சர் மா . சுப்பிரமணியன் பின்னோக்கி ஓடும் ஓட்டம் நிகழ்வை தொடங்கி வைத்தார்.  இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய அமைச்சர்  மா . சுப்பிரமணியன், வாழ்க்கையில் முன்னேற்ற முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது நீதி என்றாலும் பின்னோக்கியும் பார்க்க வேண்டும் . அதேபோல பழமைகளை மறந்து விடாமல் புதுமைகளை மட்டும் பயன்படுத்தாமல் பழமைகளையும் நாம் பயன்படுத்த வேண்டும்.  பிளாஸ்டிக் எந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடியது என்று நாம் அனைவரும் உணர வேண்டும்.  பிளாஸ்டிக் கை தடுப்பதற்கான விழிப்புணர்வு உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது . 


பிளாஸ்டிக்கை ஒழிக்க தமிழ்நாடு முதலமைச்சர் இடத்தில மிகப்பெரிய முயற்சி தான் மீண்டும் மஞ்சப்பை திட்டம்.  பழமையான விஷயங்கள் மிகவும் பலன் தரக்கூடிய ஒன்று என்று கூறுவார்கள் . வீட்டிற்கு முன் சாணி தெளித்து அரிசி மாவில் கோலம் போடுவார்கள்.  சாணி தெளிப்பதன் மூலம் சாணத்தில் இருக்கிற வேதிப்பொருள் வீடுகளுக்குள் புழு ,பூச்சிகளை அண்ட விடாது. சாணி தெளித்தல் என்பது ஒரு மரபாகவே இருந்து வந்தது . அரிசி மாவில் கோலம் இடுவது அழகு மட்டுமல்லாமல் எறும்புகளுக்கு தீனியாகவும் இருந்து வந்தது.  ஆனால் இப்பொழுது நாம் சாணி பவுடரை கடையில் வாங்கி அதன் தெளிப்பதால் பிரச்சனைகள் ஏற்படுகிறது . பெரும்பாலும் தற்கொலை முயற்சிகளுக்கு மூலப் பொருட்களாக அது மாறிவிட்டது.  பின்னால் நடப்பதை இன்றுடன் விட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னோக்கி நடப்பதற்கான பணிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்"என்றார்.