சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 
anbil

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யபட்டுள்ளதாக கூறினார். பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலை சீராக உள்ளது எனவும்,  மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு இன்னும் 2 நாட்களில் அன்பில் மகேஷ் வீடு திரும்புவார் எனவும் கூறினார். இதேபோல் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எச்1என்1 வைரஸ் தான்  உள்ளது எனவும், அவருக்கு டெங்கு பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊடகங்களில் வரும் செய்தி தவறானது என்றார்.  

இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். காய்ச்சல் குணமடைந்ததை தொடர்ந்து  காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு திரும்பியுள்ளார்.