லிப்டில் சிக்கிக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்...ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு!

 
Ma subramanian

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில் சிக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. இந்த புதிய திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். அப்போது அவர் 3வது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு லிப்டில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், திடீரென லிப்ட் அறுவை சிகிச்சை துறை கட்டடத்தில் பாதியிலேயே நின்றது. இதில், லிப்டில் இருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகள் சிலர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, லிப்டின் ஆபத்துக்கால கதவின் வழியே அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீட்கப்பட்டனர். இதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது