சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

 
SB Aditanar

சி.பா.ஆதித்தனார் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அவரது 118வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு கீழே உள்ள உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.