அடையாற்றில் மூழ்கி மாயமான 9ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு

 
Adayar

சென்னை சைதேப்பேட்டையில் அடையாற்றில் மூழ்கி மாயமான 9ம் வகுப்பு மாணவன், 18 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 
 
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் ஒருவன் நேற்று மாயமானான். மாணவன் நீரில் மூழ்கியதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு வரை தீவிர தேடுதல் வேட்டை நடத்திய தீயணைப்பு வீரர்கள் அந்த மாணவனை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். இதனையடுத்து மீட்பு பணி நிறுத்தப்பட்டு இன்று அதிகாலையில் மீண்டும் தொடங்கியது.  மாணவன் இன்னும் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் 15 மணி நேரத்திற்கு மேலாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் அண்ணா பல்கலைக்கழக குழுவினரின் ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடுதடல் பணி நடைபெற்றது. இந்நிலையில், மாயமான 9ம் வகுப்பு மாணவன், 18 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.