5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை!!

 
Rain

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.  இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

rain
இந்நிலையில் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான | மிதமான மழை பெய்யக்கூடும்என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் அறிவித்துள்ளது.