அவசர சிகிச்சை பிரிவில் முலாயம் சிங் யாதவ் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!

 
stalin

முலாயம் சிங் யாதவ்  உடல்நிலை கவலைக்கிடமாகி   உள்ள நிலையில் அவர் குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

ya

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஹரியானாவில் குருகிராம் நகரில் அமைந்துள்ள  மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  உடல்நிலை தொடர்ந்து மோசமானதால்  அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.   மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறித்து தகவல் வெளியானதும் தொண்டர்கள் மத்தியில் பதற்றம் தொற்றி கொண்டுள்ளது. இருப்பினும் கட்சித் தொண்டர்கள்,  தலைவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 


இந்நிலையில் தமிழக  முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான திரு.முலாயம் சிங் யாதவ்வின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.  அவர் முழுமையாகவும் விரைவாகவும் குணமடைவார் என்று நம்புகிறேன்.என்று குறிப்பிட்டுள்ளார்.  முன்னதாக  முலாயம்சிங் யாதவ் குணமடைய வேண்டும் என்று  ராகுல் காந்தி ,பிரியங்கா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து ட்வீட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.