என்.ஆர். இளங்கோ மகன் உயிரிழப்பு - சீமான், உதயநிதி இரங்கல்!

 
ttn

திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ மகன் மறைவுக்கு உதயநிதி ஸ்டாலின், சீமான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான  என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் கார் விபத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.  என்.ஆர். இளங்கோ மகன் மரணம் திமுக நிர்வாகிகள் , தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இளங்கோ மகன் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கழகத்தின் மூத்த வழக்கறிஞரும்  மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் என்.ஆர்.இளங்கோ அவர்களின் மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தது மிகுந்த வேதனைத் தருகிறது. ஆழ்ந்த இரங்கலையும் மகனை இழந்து வாடும் அண்ணன் இளங்கோ அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

tn

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சகோதரர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் அன்புமகனான தம்பி ராகேஷ் அவர்கள் சாலைவிபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன். ஈடுசெய்யவியலாப் பேரிழப்பைச் சந்தித்து, ஆற்ற முடியாதப் பெருந்துயரத்திற்கு ஆட்பட்டுத் தவிக்கும் சகோதரர் என்.ஆர்.இளங்கோ அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.