ஸ்பா, மசாஜ் சென்டர், அழகு நிலையங்கள் லைசென்ஸ் பெற புதிய நிபந்தனை : சென்னை மாநகராட்சி அறிவிப்பு..

 
spa

 சென்னையில் ஸ்பா, மசாஜ்  சென்டர்கள், அழகு நிலையங்கள் செயல்பட  21 புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி  வெளியிட்டிருக்கிறது.

சென்னையில் ஸ்பா , மசாஜ் சென்டர்கள் விதிகளை செயல்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  இந்த புகார்களின்பேரில், அவ்வப்போது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில்  சென்னையில்  ஸ்பா, மசாஜ் சென் டர்கள், அழகு நிலையங்கள் செயல்பட  லைசென்ஸ் பெறுவதற்கு புதிய நிபந்தனைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது.   அந்தவகையில் பின்பற்ற வேண்டிய  நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:  

spa

“*கதவுகளை பூட்டிய நிலையில் மசாஜ் சென்டர்கள் செயல்படக் கூடாது. அவை செயல்படும் நேரத்திலும் வெளிப்புற கதவு திறந்தே இருக்க வேண்டும்.

* உட்புறம் மற்றும் நுழைவு பகுதிகளில்  CCTV (கண்காணிப்பு )கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.

*அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கக் கூடாது.

*வாடிக்கையாளர்களுக்கு என தனி வருகை பதிவேடு கட்டாயம் இருக்க வேண்டும்.

*எந்த வகையிலும் பாலியல் தொழில் தொடர்பான சேவைகள் வழங்குவதற்கு தடை.

*நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு சேவை வழங்கக் கூடாது.

spa

*பக்க விளைவுகள் ஏற்படுத்த கூடிய அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.

*காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் புகார்கள் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு மேற்கொள்வார்கள். பாலியல் சேவைகள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..  

*ஒருவருக்கு சேவை வழங்கிய பின்னர் பணியாளர் தனது கையினை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதன் பின்னர் தான் அடுத்தவருக்கு சேவை வழங்கவேண்டும்.

*ஒருவருக்கு சேவை வழங்கிய பின் அடுத்தவருக்கு சேவை வழங்குவதற்கு முன் கருவிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

*உரிமம் விண்ணப்பிக்கும் நபர் உரிய படிப்பு படித்திருக்க வேண்டும்.

*விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்” என்றும் சென்னை மாநகராட்சி  நிபந்தனையில் குறிப்பிட்டிருக்கிறது.