தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன் நியமனம்..
தமிழத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு, புதிய முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணியாற்றிய 6 பேருக்கும் முதல்வர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனராக பணியாற்றிய கே.நாராயணசாமி, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி முதல்வராகவும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி பேராசிரியராக இருந்த செந்தில்குமார் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய சீனிவாசன், கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனர் திருப்பதி கடலூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ராஜாஸ்ரீ, திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், திருச்சி மருத்துவ கல்லூரி பேராசிரியர் சிவக்குமார், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதேபோல், பெரம்பலூர் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம், தேனி மருத்துவ கல்லூரி முதல்வராகவும், தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி , தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளனர்.