நீர்வளத்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு புதிய வாகனங்கள் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

 
tn

நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.6.82 கோடி மதிப்பிலான 5 மகிழுந்துகள் மற்றும் 80 ஈப்புகள்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று  தலைமைச் செயலகத்தில், நீர்வளத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 6 கோடியே 82 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 மகிழுந்துகள் மற்றும் 80 ஈப்புகளை வழங்கிடும் அடையாளமாக 10 வாகனங்களை வழங்கினார். 2021-2022 ஆம் ஆண்டிற்கான நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில், நீர்வளத் துறையின் பயன்பாட்டில் இருந்து வரும் பழைய வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் 3 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

tn

அதன் அடிப்படையில், 2021 - 2022 ஆண்டில் 5 மகிழுந்துகள் மற்றும் 71 ஈப்புகள், 6 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 20222023 ஆண்டில் 40 ஈப்புகள், 3 கோடியே 30 இலட்சம் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 2023-2024 ஆண்டில் 40 ஈப்புகள், 3 கோடியே 46 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 12 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

tn

அதன்படி 2021-2022 ஆம் ஆண்டில் 6 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 5 மகிழுந்துகள் மற்றும் 71 ஈப்புகள் மற்றும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ், நீர்வளத் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 68 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்ட 9 ஈப்புகள் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நீர்வளத்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.