தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் - ஓபிஎஸ் அதிரடி

 
ops

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அணி சார்பில் தென் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பதிலாக மாற்று நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றங்களை நாடி வருகிறார். இது ஒருபுறம் இருக்க அவரும் தனது அணியில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்நிலையில்,  தனது அணி சார்பில் தென் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் வருமாறு:- மாவட்ட அம்மா பேரவை செயலாளர்-இ.சி. ஆர்.மூர்த்தி, திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர்-ரகுமான், இளைஞர் அணி செயலாளர்-பிரவீன் குமார், துணை செயலாளர்-கணேஷ், வக்கீல் பிரிவு செயலாளர்-அருள் வேலு, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள்-திருநாவுக் கரசு, பார்த்தீபன், வர்த்தகர் அணி துணை செயலாளர்-ஆனந்தன், உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

ops

தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட நிர்வாகிகள் வருமாறு:- அவைத்தலைவர்-துரை சிங்கம், மாவட்ட இணை செயலாளர்-பொம்மி, துணை செயலாளர்கள்-தேவி, கீதா, நரேஷ்குமார், பொருளாளர்-ஏ.சி.வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள்-துளசி (மயிலாப்பூர்), ஜெயசெல்வி-(வேளச்சேரி), பகுதி செயலாளர்கள்-பானு (மயிலாப்பூர் கிழக்கு), சி.எஸ்.மணியன் (மயிலாப்பூர் வடக்கு), டேவிட் (மயிலாப்பூர் மேற்கு), தரமணி தினேஷ் (வேளச்சேரி மத்தி), வெங்கடேஸ்வரன் (வேளச்சேரி மேற்கு) மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்-தேவதாஸ், இணை செயலாளர்-ராதா தேவி, துணை செயலாளர்-ருத், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர்-சண்முகம், செயலாளர்-வீடியோ முனியாண்டி, இணை செயலாளர்-தங்கராஜ், இளைஞர் அணி செயலாளர்-அசோக்குமார். மாவட்ட மகளிர் அணி செயலாளர்-துளசி கோபு, துணை செயலாளர்-கிருஷ்ணவேணி, பொருளாளர்-அம்மு உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.