இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு ஓபிஎஸ் வாழ்த்து

 
ops rishi

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்கிற்கு தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ்ஸுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டதை அடுத்து கடந்த 20 ஆம் தேதி அன்று பிரதமர் பதவியில் இருந்து  விலகினார். லிஸ் டிரஸ்ஸுக்கு அடுத்து ஆளும் கன்சர்வேடிங் கட்சியின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின.   இந்த போட்டியில் ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்றத்தில் 142 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் நேற்று மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார். அப்போது அவரை பிரதமராக நியமனம் செய்து, புதிய அரசை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்.  இதனை தொடர்ந்து ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்கிற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தின் புதிய பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு.ரிஷி சுனக் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியா - பிரிட்டன் நல்லுறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன். நான் அவருக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.