அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு!!

 
EPS , OPS

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வான்கரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் வருகிற 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு அதிமுக பொது குழு கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கோரிக்கை விடுத்ததின்படி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 11-ம் தேதி கூடும் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 23ஆம் தேதி கழகப் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் கழக ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கழக ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் கழக பணிகளை தொடர்ந்து ஆட்சி வருகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ops eps

 அத்துடன் வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு மண்டபத்தில் கூட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை ரத்து செய்து , கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு எடுப்பது சம்பந்தமாகவும் , இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் செயற்குழு ,பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

eps ops
இந்நிலையில் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. *கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் பங்கேற்க ஈபிஎஸ் தரப்பு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  பொதுக்குழுவில் கட்சியின் கணக்கு வழக்குகளை பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் சமர்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.