"அரசியலில் போலியானவர் ஓபிஎஸ்" - நத்தம் விஸ்வநாதன் விமர்சனம்!!

 
natham viswanathan

அரசியலில் போலியானவர் ஓபிஎஸ் என்று  மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் விமர்சித்து பேசியுள்ளார்.

eps

அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அதிமுக கழக செயலாளர் மாவட்ட செயலாளர்கள் ,  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் , செய்தி தொடர்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் . அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நத்தம் விஸ்வநாதன் , "பொருட்களில் போலியானது உண்டு  என்று நமக்கு தெரியும்.  அது போல தான் அரசியலில் போலியானவர் ஓபிஎஸ்.  கட்சியிலிருந்து அவர் ஒதுக்கப்பட்டதில் மாற்றம் ஏதும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி தொடர்ந்து செயல்படும்" என்றார். 

natham viswanathan

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் மீண்டும் ஓபிஎஸ் அணியினரை இணைக்க கூடாது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்குங்கள் . அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி அமையும் . கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதை அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக தலைமை பார்த்துக் கொள்ளும் கட்சியை வலுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும் . நாம் உறுதியாக இருந்தால் எதிரிகளை வீழ்த்துவது எளிது என்றார்.