மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து..

 
மதுராந்தகம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து..

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.  இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓடிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்,  பழுதான  லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த லாரிக்குப் பின்னால் மற்றொரு லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து , பின்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளனது.
 லாரி மீது  பேருந்து மோதி விபத்து
இதில்  தனியார் ஆம்னி பேருந்து  ஓட்டுநர்  மட்டும் லேசான காயமடைந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர்.  இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இதனையடுத்து  அச்சரப்பாக்கம் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.