உசிலம்பட்டி அருகே பைப் வெடி விபத்து - ஒருவர் பலி ; 6 மாத குழந்தை படுகாயம்!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன் பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் வீட்டு மாடியில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. இதில் இளைஞர் அஜித்குமார் என்பவர் மாடியில் இருந்து சுமார் 40 அடி தூரத்தில் உடல் சிதறி நிலையில் தூக்கி வீசப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த அஜித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் செக்கானூரணி தர்மராஜ் மகன் ன்பது தெரியவந்தது . செல்போன் கடை ஊழியர் இவர் வீட்டு விசேஷத்திற்காக வெடி போடுவதற்காக வரவழைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில்பக்கத்து வீட்டை சேர்ந்த வனிதாவும், அவரது ஆறு மாத குழந்தையும் காயமடைந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வானவேடிக்கை பயன்படுத்தக்கூடிய பைப் வெடி வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது . சக்திவாய்ந்த இந்த வெடி விபத்தால் வீடு பலத்த சேதம் அடைந்து , அதிலிருந்த அறைகள் இடிந்து விழுந்துள்ளன , மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புகளும் பாதிப்படைந்துள்ளது. பிரவீன் பைப் வெடி தயாரித்தாரா? அல்லது வாங்கி வந்து விற்பனை செய்து வந்தாரா?என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெடிகளை வெடிக்க அஜித்குமாருக்கு அனுபவம் உண்டு என்பதால் அவர் வரவழைக்கப்பட்டுள்ளார். பிரவீன் தலைமறைவான நிலையில் அவரின் மனைவி பூமாதேவியை தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.