நீதிமன்றம் தடை விதிக்காதபடி ஆன்லைன் ரம்மிக்கு சட்டம் வரும் - அமைச்சர் ரகுபதி உறுதி!!

 
rummy

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் முன்மாதிரியான சட்டம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ரகுபதி உறுதியளித்துள்ளார்.

tn

சென்னை தலைமை செயலகத்தில் இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது ஆன்லைன் ரம்மி தடை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,  இது தொடர்பாக இரண்டு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும். எந்த நீதிமன்றத்தாலும்  இந்த சட்டத்திற்கு தடை விதிக்கக்கூடாது அந்த . வகையில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான் முதல்வரின் விருப்பம்.  அதற்கேற்ற வகையில் நாங்களும் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். மிக விரைவில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் குறித்து அவசர சட்டம் கொண்டுவரப்படும்.  அத்துடன் சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றார். 

govt
தொடர்ந்து பேசிய அவர் , ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா  பொருத்தவரையில் ஆளுநரிடமிருந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு,  அங்கிருந்து சில விளக்கங்கள் கேட்கப்பட்டன.  அதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறை மூலம் பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  பல்கலைக்கழகவேந்தர்களாக யாரை நியமனம் செய்ய வேண்டும் என்பதை அரசின் முடிவுக்கு விட வேண்டும் என்ற சட்டமுன்வடிவுகளும் ஆளுநரின் பரிசீலனையில் தற்போது இருக்கிறது என்றார்.