சென்னையில் ஒரு பள்ளிக்கு மட்டும் இன்று விடுமுறை

 
s

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.  பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழை நீரில் மின்சாரம் பயந்து இருப்பதால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

r

பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கியது முதல் சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது.  கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வந்ததால் சென்னையில் பல பகுதிகள் ஆறுகள்,  குளங்கள் போல் மாறிவிட்டன.    அங்கு ராட்சச பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன . 

இதனால் நேற்றும் நேற்று முன்தினமும் சென்னை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.   இன்று மழை குறைந்து விட்டதால் சென்னை மாவட்டத்தில் இன்று பள்ளி,  கல்லூரிகள் வழக்கம் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது .

இந்த நிலையில்,  சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,  பள்ளியின் வளாகத்தில் தேங்கியிருக்கும் மழை நீரில் மின்சாரம் பாய்ந்து இருக்கிறது கண்டறியப்பட்டுள்ளது.  இதை அடுத்து  அந்த ஒரு பள்ளிக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.