ஆயுத பூஜையையொட்டி நாளை வண்டலூர் பூங்கா திறப்பு

 
TTN


சென்னை செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூரில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெள்ளைப் புள்ளிகள் , வங்கப்புலிகள்,  சிங்கங்கள் , சிறுத்தைகள் , யானைகள் , மனித குரங்கு , காண்டாமிருகம்,  நீர் நாய்,  முதலைகள் என ஏராளமான விலங்குகள் அமைந்துள்ளன.  அதேபோல் விதவிதமான  பறவைகளும் ஏராளமாக இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.

vandalur zoo

பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பூங்காவிற்கு வருகை தந்து வனவிலங்குகளை பார்வையிட்டு மகிழ்ந்து செல்கின்றனர்.  வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டில் சிறந்த உயிரியல் பூங்காவாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டது.அதேசமயம் வாரம் ஒரு நாள் பூங்காவிற்கு விடுமுறை அளிக்கப்பட்டு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

TTN

இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை திருநாள் கொண்டாடப்படும் நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம் போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் விடுமுறை அளிப்பது என்பது வழக்கமாக உள்ள நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.