அபார துணிச்சல், தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டு பாரதியார் - பிரதமர் மோடி புகழாரம்

 
modi

அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டாக 'மகாகவி பாரதியார்' விளங்கினார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மகாகவி பாரதியின் 141வது பிறந்தநாளையொட்டி வாரணாசியில் அவர் வாழ்ந்த புதுப்பிக்கப்பட்ட நினைவு இல்லத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல், எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். 
 
இந்நிலையில், பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "போற்றுதலுக்குரிய சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அன்னாரை நான் வணங்குகிறேன். அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டாக 'மகாகவி பாரதியார்' விளங்கினார். இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி குறித்தும் அவர் மாபெரும் கனவு கண்டார். பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.