தேவரின் குருபூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு?

 
modi

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தேவர் சமூகத்தின் மாபெரும் தலைவரும், நேதாஜியின் நண்பரும், சிறந்த பேச்சாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மதுரையில் தமது 56வது வயதில்  காலமானார். அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா, தேவர் ஜெயந்தி விழாவாக கொண்டாப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அவர் பிறந்த ஊரான ராமநாதபுர மாவட்டம் கமுதி வட்டத்திற்கு உட்பட்ட பசும்பொன் கிராமத்தில் குருபூஜை விழா நடைபெறும். இந்நிலையில், தேவரின் குருபூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 30ம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 
பிரதமர் நரேந்திர மோடி  ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு சென்று, தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு, டெல்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.