வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை நடப்பு கூட்டத்தொடரிலேயே கொண்டு வரவேண்டும் - அன்புமணி

 
anbumani

வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை நடப்பு கூட்டத்தொடரிலேயே கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி , உள்ளிட்ட பாமக குழுவினர் 7 பேர் வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் தொடராக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை எல்லாம் முதல்வரிடம் சொல்லி எங்கள் கோரிக்கை என்ன என்பதை விளக்கமாக சொல்லும் வகையில் முதல்வரை சந்தித்தோம்.முதல்வருடன் நடந்த சந்திப்பு நல்ல சந்திப்பாக அமைந்தது. மீண்டும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்.

anbumani ramadoss mkstalin

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் மாநில அரசுக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்றும், உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் என்றும், சாதகமான அம்சங்களை கூறியுள்ளது என்பதையும் முதல்வரிடம் விளக்கமாக சென்னோம்.வன்னியர் இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம் தான் சிக்கலாக இருப்பதால் , புள்ளி விவரம் இருக்கிறது அதனை சேகரித்து சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தில் சாதகமான நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

anbumani

தமிழக அரசு நீதிமன்றத்தில் மிக சிறப்பான வழக்கறிஞர்களை வைத்து தான் வாதாடியது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு எல்லாம் இருக்கிறது ஆனால் வன்னியர்களுக்கு இல்லை.வன்னியர் இட ஒதுக்கீடு யாருக்கும் பாதகமான இட ஒதுக்கீடு கிடையாது. 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக - அதிமுக-வின் மேல் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளே நாங்கள் போக விரும்பவில்லை. இது சமூக நீதி பிரச்சனை. இருக்கிற புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண்டும். அரசு நினைத்தால் ஒரு வாரம் காலத்தில் இந்த புள்ளிவிவரங்களை சேர்க்க முடியும். இவ்வாறு கூறினார்.