தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!

 
tn

தமிழக அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தமிழக அரசே நியமிக்கும் மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.

tn

இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் , துணை வேந்தர்களை ஆளுநர் நியமிப்பதால் அரசு கொள்கை முடிவு எடுப்பதில் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது. துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்.  இது மக்களாட்சிக்கு விரோதமானது. துணைவேந்தர் நியமன அதிகாரம் ஆளுநரிடம் இருந்தால் அது சர்ச்சைக்கு வித்திடும், ஆளுநர் – அரசுக்கு இடையே அதிகார மோதலுக்கு வித்திடும். 13 பல்கலைக்கழகங்கள் வரலாற்று சிறப்புமிக்க பணிகளை ஆற்றி வருகின்றன. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில், மாநில அரசு தான் துணைவேந்தரை நியமிக்கிறது;   இதே நிலை தான் கர்நாடகம், தெலங்கானாவிலும் உள்ளது என்றார்.

stalin

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், குஜராத் மாநிலம் போல் தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணைவேந்தரை நியமிக்கும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் நெருடல் இருக்க வாய்ப்பு இல்லை. அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒருமனதாக சட்டமுன்வடிவை நிறைவேற்றித்தர வேண்டும்  என்று கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து பல்கலைகழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதவை பேரவையில்  நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.