குற்றால அருவிகளில் 24 ,மணிநேரமும் குளிக்க அனுமதி!!

 
tn

குற்றால அருவிகளில் நேற்று முதல் 24 மணி நேரமும் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

courtrallam

தென்காசி மாவட்டம் குற்றால அருவி முக்கியமான சுற்றுலாத்தலமாக பார்க்கப்படுகிறது.  இங்கு கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வந்தது.  இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

tn

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் , கடையநல்லூர் எம்எல்ஏவுமான கிருஷ்ண முரளி சட்டப்பேரவையில் இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.அத்துடன் திமுக மாவட்ட செயலாளர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததுடன்,  தென்காசி எம்எல்ஏ பழனி நாடாரும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.  இதன் அடிப்படையில் நேற்று முதல் 24 மணி நேரமும் குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, மெயினருவியில் இரவு நேரத்தில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பழைய குற்றால அருவியிலும் இரவில் குளிக்க அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.