சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு - காவலர் பரபரப்பு சாட்சியம்!!

 
tn

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்து வரும்போதே ஜெயராஜ் - பென்னிக்ஸ் காயத்துடன் இருந்தனர்  என்று சாத்தான்குளம் வழக்கில் காவலர் மாரிமுத்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார்.

tn

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர் . இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வழக்கில் , சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது  சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது . இந்த வழக்கு தற்போது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

tn

அந்த வகையில்  நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கோவில்பட்டி கிளை சிறை காவலர் மாரிமுத்து நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ்  சாத்தான்குளத்தில் இருந்து வரும்போதே காயத்துடன் வந்தார்கள்.  பிறகு கிளை சிறையில் இருந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவர்களை போலீசார் முத்துராஜா மற்றும் செல்லத்துரை ஆகியோர் அழைத்து சென்றனர் என்று அவர்களை அடையாளம் காட்டி சாட்சியமளித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைவருகிற 29-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.